sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

துபாயில் 67 மாடி குடியிருப்பில் தீ விபத்து

/

துபாயில் 67 மாடி குடியிருப்பில் தீ விபத்து

துபாயில் 67 மாடி குடியிருப்பில் தீ விபத்து

துபாயில் 67 மாடி குடியிருப்பில் தீ விபத்து


ADDED : ஜூன் 15, 2025 01:55 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்,: மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயின் பிரபலமான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதி மரீனா. இங்கு, 'டைகர் டவர்' என்ற பெயரில் 67 மாடி குடியிருப்பு உள்ளது.

இந்த கட்டடத்தில், 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 3,820 பேர் வசிக்கின்றனர்.

இந்நிலையில், கட்டடத்தின் 30வது மாடியில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ சில நிமிடங்களில் மளமளவென எரிந்து உயரே உள்ள தளங்களுக்கும், கீழ் தளங்களுக்கும் பரவியது.

இது குறித்து, தீயணைப்பு துறை மற்றும் அவசரகால மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், கட்டடத்தில் இருந்த 3,000க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.

தீயுடன் புகையும் பரவியதால் பலர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிர் சேதமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.

உயரமான பகுதியில் தீ பற்றியதால், தீயணைப்பு வீரர்கள் காலை வரை போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக, துபாய் மரீனாவில் டிராம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

குடியிருப்புவாசிகளுக்கு தற்காலிக தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டன.






      Dinamalar
      Follow us