சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :23 days ago
கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ த்ரிவிக்ரம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று (07.06 2026) கோலாகலமாக நடந்தது. இதில் வேத ஆகமப்படி பட்டாச்சார்யாரகள் ஏழு நிலைகள் கொண்ட கும்ப கலசங்களுக்கு புனித நீரை ஊற்றினர்.
கோவை மாவட்டத்தில் ஏழு நிலைகள் கொண்ட ஒரே வைணவ கோவில் இந்தக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.