உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  ‘பிரம்மபுரி’ பரசுராமலிங்கேஸ்வரர் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்

 ‘பிரம்மபுரி’ பரசுராமலிங்கேஸ்வரர் பிரம்மோத்சவத்தில் திருக்கல்யாணம் கோலாகலம்

அயனாவரம்: பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.


அயன்புரத்தில், பிரசித்தி பெற்ற பிரம்மபுரி எனும் பரசுராமலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா நாளை நிறைவடைகிறது. விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருள்கிறார். நேற்று இரவு, வேத மந்திரங்கள் முழங்க, பரசுராமலிங்கேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மலர் அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் வழிநெடுகிலும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இன்று பந்தமாரி உத்சவம் நடந்தது. நாளை மாலை உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் நடத்தப்படுவதுடன், பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !