சிங்கம்புணரி படைத்தலைவி அம்மன் கோயில் திருவிழா; அம்மன் எடுப்பு
ADDED :1 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டியில் பெரிய படைத்தலைவி அம்மன் எடுப்பு திருவிழா நடந்தது. ஊரின் மந்தையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஊர்வலமாக விநாயகர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் காரண புரவிகளும் கொண்டுவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பிறகு அம்மன் சிலையை அங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள பெரிய படைத்தலைவி அம்மன் கோயிலுக்கு கிராமத்தினர் எடுத்துச் சென்றனர். அப்போது ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனாக பொம்மைகளையும் எடுத்து வந்தனர். பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஜூன் 11) புரவிகள் அந்தந்த காரண கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.