இரும்பை பாலா திரிபுரசுந்தரி கோவிலில் பவுர்ணமி பூஜை
ADDED :13 hours ago
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில் , பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் பவுர்ணமி பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்பாளுக்கு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு 7 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு நவாவரணபூஜை, தீபாரதணையும், தொடர்ந்து பவுர்ணமி பூஜை நடந்தது. தொடர்ந்துஅம்மன் உள் பிரகாரத்தில் தேரில் வலம் வந்தார். பின்பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.