மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
ADDED :9 hours ago
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தர்களின் வசதிக்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோயில் ரத வீதியில், உபயதாரர் நிதி, 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்களின் வசதிக்காக, புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இதன், திறப்பு விழா நேற்று நடந்தது. கோயில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா ஆகியோர், புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தனர். இதன் முன்பக்கத்தில், அலங்கரிக்கப்பட்ட விநாயகர் மற்றும் முருகன் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.இவ்விழாவில், உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.