பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றுதலுடன் துவங்கியது.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 30 சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் விழா நடந்தது. இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. முன்னதாக கொடி கம்பத்திற்கு பால், இளநீர், பன்னீர், தேன், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று காலை கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அம்மன் சிம்மம், குதிரை, ரிஷபம், யானை, அன்னப்பட்சி, புஷ்பப் பல்லாக்கு, மின்னொளி அலங்காரம் உட்பட பல்வேறு வாகனத்தில் இரவில் வீதி உலா வருவார். முக்கிய திருவிழா ஜூலை 14ல் மாவிளக்கு ரத உற்ஸவம், மறுநாள் பத்தாம் நாள் திருவிழா அக்னிசட்டி திருவிழா நடக்கிறது. ஜூலை 21 ல் மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் செயல் அலுவலர் சுந்தரி, மண்டகப்படிதாரர்கள் சிதம்பரசூரியவேலு, பாலசுந்தரம், ஜோதி, அண்ணாமலை, கண்ணன், வீரமணி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு கோயில் அருகே எஸ். ஐ., தலைமையில் அவுட்போஸ்ட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அப் பகுதியில் கண்காணிப்பு கேமராவசதி செய்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.