பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1 days ago
கோவை; ஆனி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.