உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவனி சுவாமிகள் பழநி வருகை

ஆவனி சுவாமிகள் பழநி வருகை

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு ஆவனி சங்கராச்சார்ய சுவாமிகள் அத்வைதானந்த பாரதீ சுவாமிகள் வந்தார்.


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஆவனி சிருங்கேரி மகா சமஸ்தான பீடாதிபதி அத்வைதானந்த பாரதீ சுவாமிகள் பழநி வந்தார். எம்.என்.ஆர்., மடத்தில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றார். அதன்பின் முருகன் கோயிலில் நடந்த ராக்கால பூஜையில் சுவாமிகள் பங்கேற்றார். நேற்று காலை சிறுகால சந்தி பூஜையில் பங்கேற்க வந்த சுவாமிகளை கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ் வரவேற்றார். கோயில் குருக்கள் செல்வசுப்பிரமணி, அலுவலர்கள் உடன் இருந்தனர். அதன்பின் பெரியநாயகி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த சுவாமிகள், எம்.என்.ஆர்., மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து தண்டபாணி தேவஸ்தான அஷ்டக ஸ்தானிகர் சங்கம், கோவை ரோடு வன்னி விநாயகர் கோயிலுக்கு சுவாமிகள் சென்றார். சங்கத்தலைவர் கும்பேஸ்வர குருக்கள், சுந்தரேச குருக்கள் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர். அதன்பின் சுவாமிகள் பெங்களூருக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !