சிறுவாபுரி கோவில்களில் 325 பேர் துாய்மை பணி
ADDED :7 hours ago
கும்மிடிப்பூண்டி: அம்பத்துாரைச் சேர்ந்த ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில், நேற்று சிறுவாபுரியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில், அகத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில் நடந்த துாய்மை பணிகளில், 325 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மூன்று கோவில் வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர். கோவில்களுக்கு வந்த பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாற்றாக, துணிப்பைகளை பக்தர்களுக்கு வழங்கினர். பாலசுப்ரமணிய சுவாமி அன்னதானம் கூடம் அருகே மரகன்றுகளை நட்டனர்.