திருவாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
காஞ்சிபுரம்: சிங்காடிவாக்கம் திரு வாலீஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று துாய்மைப் பணி மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிங்காடிவாக்கத்தில் திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிக பழமையான இக்கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் துாய்மைப் பணி மேற்கொண்டனர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பை கழிவுகளையும், தேவையற்ற செடி, கொடிகளையும் அகற்றினர். கோவில் கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளையும், பிற விக்ரஹங்களையும், பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.
கோவில் எதிரில் மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் இருந்த சப்த ரிஷி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளத்தை, ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் துார்வாரினர். குளத்தில் இருந்த இரு சிவலிங்க கற்சிலைகளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.
முன்னதாக பிரதோஷத்தையொட்டி, புதுச்சேரி சிவசங்கரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.