உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கு; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவை ; தமிழ் ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு தினம் என்று கொண்டாடி வருகிறோம் இந்த நாளில் நதிக்கரை மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்துவார்கள் பெண்கள் தாலி கயிறு மாற்றுதல் புது மணப்பெண்கள் சுமங்கலிகள் புதிய தாலி கயிறுகளை மாற்றி குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். இதேபோன்று விவசாயம் செழிக்கவும் விதை மற்றும் விவசாய பணிகள் செழிக்கவும் இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்கவும் இந்த நாள் சிறந்த நாளாக கருதப்படுகிறது இதையொட்டி கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த புவனேஸ்வரி அம்மன் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !