கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :1 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசை நிகும்பலா யாகம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி அமாவாசையொட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு தாலாட்டு பாடல்களுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேலும் கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பத்ரகாளி கவசம் பாடி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிளகாய் வற்றலை யாக தீயில் சேர்த்து நிகும்பலா யாகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.