
நான் நந்திதா; பேறு காலத்தை எதிர் நோக்குற பெண்களின் மனச்சிக்கல்களுக்கு தீர்வு சொல்றது என் பணி. ஜோஜோ - சாயா; சஞ்சய் - நோரா... தீர்வுக்காக என்கிட்ட வந்த தம்பதியர்!
'நான் அப்பா ஆகப்போறேன்ங்கிற உணர்வு பரவசம் தருது. அதிசயங்கள் நிகழ்த்துற தெய்வ மனுஷி என் சாயா. அவ கூடவே நான் ஒட்டியிருப்பேன்!' - ஜோஜோ!
'ஜோஜோ... நான் தெய்வம் இல்லை; சாதாரண மனுஷி. எனக்கும் சோர்வு, கோபம் வரும். உன்னை மாதிரி ஆவலோட இந்த காலத்தை என்னால கடக்க முடியலை. என் மனநிலையை புரிஞ்சுக்கோ!' - சாயா!
'நோரா... லட்சியம் கொண்ட பெண் நீ; ஆனா, அந்த தேடல் இப்போ உனக்குள்ளே இல்லை. குழந்தைக்காக உன்கிட்டே நிறைய மாற்றங்கள். இதை என்னால புரிஞ்சுக்க முடியலை!' - சஞ்சய்.
'ஆமா... நான் மாறிட்டேன். சில பெண்கள் தங்களை மாத்திக்காம இருக்கலாம். குழந்தையை பராமரிப்பு மையத்துல விட்டுட்டு லட்சியத்தை நோக்கி ஓடலாம். எனக்கு என் குழந்தையை நானே பாதுகாக்கணும்!' - நோரா.
ஜோஜோ காட்டியது அன்பு - சஞ்சய் காட்டியது அக்கறை; இரண்டுமே சரி! ஆனா, இந்த சரியானதைவிட துணையை புரிஞ்சுக்கிறது முக்கியம். இதை உணர்த்தத்தான் சாயாவும், நோராவும் இப்படி பேசுனாங்க. பேச வைச்சது என்னோட இந்த பாடம்...
'பெண்கள் தங்களோட உணர்வுகளை மனஉறுதியோட சொல்லணும்!'
ஹலோ... இந்த பாடம் உங்க எல்லாருக்கும்தான்!
படம்: வொண்டர் விமன் (மலையாளம்)

