sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஜெத்தாவில் கேரள பவராவலி மக்கள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!

/

ஜெத்தாவில் கேரள பவராவலி மக்கள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!

ஜெத்தாவில் கேரள பவராவலி மக்கள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!

ஜெத்தாவில் கேரள பவராவலி மக்கள் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!


மார் 28, 2025

Google News

மார் 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெத்தாவில் வசிக்கும் கேரள பவராவலி சமூகம் சார்பில் சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் போற்றும் வகையில் இப்தார் நிகழ்வு நடந்தது. கேரளாவின் 14 மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் சமூக, அரசியல், கல்வி, கலாச்சாரம் மற்றும் மத அமைப்புகளின் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டு, ஒற்றுமையின் உணர்வை மேலும் வலுப்படுத்தினர்.

ஜெத்தா கேரள பவராவலி சங்கத் தலைவரான கபீர் கோண்டோட்டி, பவராவலியின் பயனுள்ள செயற்பாடுகளை முன்னிலை படுத்தினார் . மேலும், நோன்பு இருப்பதன் நோக்கம் உணவு மற்றும் பானத்தில் இருந்து விலகுவதற்கு மட்டுமல்ல; இது மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையை அடைவதற்கான ஆழமான ஆன்மீக பயணமாகும் என ரமழானின் புனித மாண்பினை குறித்து பகிர்ந்து, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் ஆன்மீக மதிப்புகள் வலியுறுத்தினார்.



மேலும், நோன்பு இருப்பது மனதை மேம்படுத்துகிறது, ஆன்மீக தூய்மையை வளர்ப்பதன் மூலம்,, ஆன்மாவை சுத்திகரிக்கிறது என்றும் ஒருவரை நன்மை, இரக்கம் மற்றும் சுய ஒழுக்கத்தின் பாதையில் வழிநடத்துகிறது என்றும் பகிரப்பட்டது. இது மனிதநேயத்தின் நினைவூட்டலாகவும், அன்றாட வாழ்க்கையில் இரக்கம், பணிவு மற்றும் நன்றியுணர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வழிகாட்டியாகவும் செயல்படுகிறது. 'இது சக மனிதர்களிடம் கருணை மற்றும் நட்பின் எல்லையற்ற செயல்களுக்கு வழிவகுக்கிறது,' என்று கபீர் தனது ரமலான் செய்தியை வலியுறுத்தினார்.



நமது சமூகத்தை தீவிரமாக பாதிக்கும் போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சியில், ஜெத்தா கேரள சமூகம் ஒன்றுபட்டு செயல்படுகிறது என்பதையும் அவர் தனது உரையில் எடுத்துரைத்தார். கூட்டு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம், இந்த அச்சுறுத்தலின் பிடியிலிருந்து சமுதாயத்தை விடுவித்து, ஒரு ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லா எதிர்காலத்தை உருவாக்க சமூகத்தினர் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.



பொது கன்வீனர் மன்சூர் வயநாடு வரவேற்புரை வழங்க, பொருளாளர் ஷரீஃப் அறக்கல், நிகழ்வில் கலந்து கொண்டு உதவிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். பீரங்குட்டி கொய்சான், ஜலீல் கண்ணமங்கலம், மற்றும் சி.எச். பாஷீர் ஆகியோர், இஃப்தாரின் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கை வகித்தனர். அவர்களுடன், உனி தெக்கேடாது மற்றும் நவாஸ் தங்கலும் சிறப்பாக செயலாற்றி, இந்த நிகழ்வு தடையின்றி வெற்றிகரமாக நடத்தினர்.



ஜெட்டா கேரள பவராவலியின் அலுவலக நிர்வாக குழுவில் சலா கரடன், மிர்சா ஷரீஃப், வேணுகோபால் அந்திக்காத், அப்துல் காதர் ஆலுவா, ஷமெர்நாட்வி, ரஃபி பீமபள்ளி, அலி தெக்குத்தோடூ, மற்றும் நௌஷாத் சத்தல்லூர் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். அவர்கள் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்டனர்.



இந்த சமூக இப்தார் நிகழ்வில், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவும் ஒருவருக்கொருவர் மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் மேடையாகவும் அமைந்தது.



- நமது செய்தியாளர் M Siraj






Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us