/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் தமிழிசையை மீட்டெடுக்கும் தமிழக பெண்மணி
/
சிங்கப்பூரில் தமிழிசையை மீட்டெடுக்கும் தமிழக பெண்மணி
சிங்கப்பூரில் தமிழிசையை மீட்டெடுக்கும் தமிழக பெண்மணி
சிங்கப்பூரில் தமிழிசையை மீட்டெடுக்கும் தமிழக பெண்மணி
ஜூலை 01, 2025

தமிழகத்தில் பிறந்து சிங்கப்பூரில் மணமுடித்து அங்கு தமிழ் இசையை மீட்டெடுக்கும் பெரும்பணியை சிரமேற்கொண்டிருக்கிறார் செளந்திரநாயகி வயிரவன்.1972-ஆம் ஆண்டு செட்டி நாட்டில் பிறந்த சௌந்தரநாயகி வயிரவன், 1993-ஆம் ஆண்டு கணினி சம்மந்தபட்ட நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சிங்கப்பூர் குடியுரிமைவாசி டாக்டர் வயி. ச. வயிரவனின் மகனான வயி. வயிரவனை மணம் முடித்து சிங்கை வந்தார். லண்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் பட்டங்கள் பல பெற்றவர். இந்திய வம்சாவழியினருக்காக 'onlinevoice', 'singindia' எனும் இணைய பத்திரிகைகளை தொடங்கியவர் பல முக்கிய பிரமுகர்களை நேர்காணல் செய்து, கருத்து பரிமாற்றத்திற்குப் பாலமாக விளங்கியவர். சிங்கை நகரத்தார் மலரின் ஆசிரியராக மூன்று வருடங்கள் பணியாற்றியவர். புகழ் பெற்ற அனைத்துலக பத்திரிகைகள் பலவற்றில் இவரின் எழுத்து தடம் பதித்துள்ளது. முக்கிய அமைப்புகளில் செயலவை உறுப்பினராக பொருப்பேற்றவர். தமிழ் இசையை மீட்டெடுக்கும் பெரும்பணியை சிரமேற்கொண்டிருப்பவர். கர்நாடக இசைக்கச்சேரிகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளார். பாட்டுப் போட்டிகள் பலவற்றில் நடுவராக விளங்கியவர். இவர் தமிழ்மொழி மேலும் இசை மேலும் கொண்ட பற்றினால், கலாமஞ்சரி எனும் நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் தமிழ்இசையை வளர்க்க முயல்பவர்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்கலையும், இசைக் குறுந்தட்டுகளையும் வெளியிட்டு வருபவர். அண்மையில், சிங்கப்பூரின் மணிவிழாவை முன்னிட்டு, “Little India and the Singapore India Community, Through the Ages” எனும் நூலை, தகவல் களஞ்சியத்தை, வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மகத்தான மருத்துவம் புரிந்த மாமனாருக்கு, இந்தப் புத்தகத்தை மருமகள் சமர்ப்பித்தார். தகவல்: மோகனபிரியா தனசேகரன்
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement
Advertisement
சகோதரிக்கு வாழ்த்துக்கள், சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியில் ஒன்றாக இருப்பதை இதுபோன்ற சிங்கை வாழ் தமிழர்கள் பல நிகழ்வுகள்/ புத்தக வெளியீடுகள் மூலம் பாதுகாக்க வேண்டும்.
Rate this
சகோதரிக்கு வாழ்த்துக்கள், சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியில் ஒன்றாக இருப்பதை இதுபோன்ற சிங்கை வாழ் தமிழர்கள் பல நிகழ்வுகள்/ புத்தக வெளியீடுகள் மூலம் பாதுகாக்க வேண்டும்.
Rate this
Advertisement