
ஜூலை 3 - வியாச பூஜை
* வேததர்மத்தில் நம்பிக்கை வைத்தால் எல்லாம் நலமாக அமையும்.
* நல்ல மனிதன் இருக்கும்வரை மழை பெய்து கொண்டிருக்கும்.
* எப்போதும் கடவுளை நினைப்பவர்களுக்கு குறைவு ஏற்படாது.
* கோபம் என்ற தீயகுணத்தை கைவிடு. மனம் சமநிலையில் இருக்கும்.
* புலன்களின் கவர்ச்சியானது அறிஞர்களை கூட தடுமாறச் செய்யும்.
* நல்ல வழியில் பணத்தை தேடு. அதை நல்ல செயல்களுக்கு மட்டும் செலவிடு.
* மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பவனே உயர்ந்த மனிதன்.
* பிறரது குறைகளை மறப்பவனே தெய்வமாகிறான்.
* புத்தியால் மனதை கட்டுப்படுத்து. வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.
* தர்மம் எங்கு உள்ளதோ, அங்குதான் கடவுளும் இருப்பார்.
* வாழ்க்கை என்பது கடல் போன்றது. அதைக் கடக்க தர்மம் என்னும் படகை பயன்படுத்து.
* உடன்பிறந்த குணங்கள் ஒருவரை விட்டு நீங்குவதில்லை.
* உனது வாழ்வையே திசை திருப்பிவிடும் சக்தி பேராசைக்கு உண்டு. கவனமாக இரு.
* நல்ல எண்ணமுடன் வாழ்ந்தால், அதுவே உன்னை நல்ல இடத்திற்கு அழைத்து செல்லும்.
* ஆசையற்றவருக்கு அறிவு சிறப்பாக வேலை செய்யும்.
என்கிறார் வியாசர்

