/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
/
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
ADDED : ஆக 11, 2023 03:04 PM

ஆகஸ்ட் 14 பிறந்த நாள்
* எதற்கும் உணர்ச்சிவசப்படாதே. கோபப்படாதே. மீறினால் அறிவை இழப்பாய்.
* கடமையை சரியாகச் செய். அப்போதுதான் கடவுள் மீது துாய பக்தி செலுத்த முடியும்.
* நான் யார் என்பதற்கு விடை தேடு. உண்மைகள் புரியும்.
* நல்ல செயல்களில் ஈடுபடுவதால் கிடைக்கும் நிறைவே உண்மையான மகிழ்ச்சி.
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என இருப்பவரே உத்தமர்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* மனம் என்பது விளைநிலம். அதில் நல்ல எண்ணம் என்னும் விதையை விதையுங்கள்.
* மனதில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உனக்கு உண்மையான எதிரி.
* ஆசையை அடியோடு ஒழிக்க முடியாது. அதை ஒழுங்குப்படுத்து.
* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால், அவர் ஞானம் பெற்றுவிட்டார்.
* கற்பு என்பது உயிரினும் மேலான ஒழுக்கம்.
* ஆண், பெண் ஒழுக்கத்தை பாதுகாக்கும் கவசமே திருமணம்.
* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்லாதே. மீறினால் அமைதி இருக்காது.
* தவறு செய்வது இயல்பே. அதை திருத்திக்கொள்.
என்கிறார் வேதாத்ரி

