
ஆகஸ்ட் 16 நினைவு நாள்
* எந்த நிலையிலும் கலங்காதவன் உண்மையான ஞானி.
* கடவுளை வெளியில் தேடாதே. அப்படி செய்தால் அது அறியாமை.
* கடவுளின் அருள் இருந்தால், அறியாமையில் இருந்து விடுபடலாம்.
* ஆணவத்துடன் செயல்பட்டால் கடவுளை நெருங்க முடியாது.
* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண்பதற்கு மனம் ஏங்க வேண்டும்.
* பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம்.
* பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் அர்த்தம் இல்லை.
* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு உதவி செய்யும்.
* அமைதியே ஞானத்தின் முதல் அடையாளம்.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.
* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு கொடு. மனம் சமநிலையில் இருக்கும்.
* உண்மையையும், பொய்யையும் பிரித்து அறிய பழகு.
* விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எதுவும் சாத்தியமே.
* உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம்.
* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.
சொல்கிறார் ராமகிருஷ்ணர்

