Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/மேஷம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்


குருப்பெயர்ச்சி பலன்கள் : மேஷம்
24 செப் 2018 to 18 அக் 2019

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மேஷம்பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி  அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை தந்திருப்பார். இப்போது  8-ம் இடமான விருச்சிகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வைக்கு விசேஷ சக்தி உண்டு. வாழ்வில் கோடி நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.  அவர்  2019 மார்ச் 13ல் அதிசாரம் பெற்று  9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 2019 மே19 ல் மீண்டும் குரு விருச்சிகத்திற்கு திரும்புகிறார். சனிபகவான்  தனுசு ராசியில்  சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைபலத்தால் நன்மை கிடைக்கும்.  தொழிலில்  முன்னேற்றம் ஏற்படும்.   

இனி பொதுபலனைக் காணலாம்.

குருபகவான் விரய ஸ்தானமாகிய மீனத்தைப் பார்ப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை மூலம் வருமானமும் பெருகும். இதுவரை உள்ள சேமிப்பு மூலம் வீடு, நிலம் என அசையாச் சொத்து வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் கிடைக்கும் பணத்தில் சிலர் புதுவீடு கட்டவும் வாய்ப்புண்டு. நவீன சொகுசு கார் வாங்க யோகமுண்டாகும்.  குருபகவான் 2019 மார்ச் 13க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பணி, தொழில் ரீதியாக பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உருவாகும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு காணப்படும்.  விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு குறைவிருக்காது. விரும்பிய பணி, இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். 2019 மார்ச் 10க்கு பிறகு  வேலையின்றி இருப்பவர்களுக்கு புதிய வேலை  கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். சனியால் திடீர் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. அவரது 10-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.  2019 மார்ச் 10க்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல இடமுண்டு.  வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும். எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நாடக, சினிமா நடிகர்கள் நற்புகழ் பெறுவர்.  

மாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.  2019 மார்ச் 10க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கூடுதலாக சொத்து வாங்க இடமுண்டு.   

பெண்கள் வசீகரமான பேச்சால் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். வீட்டுச் செலவு விஷயத்தில் சற்று சிக்கனத்தை பின்பற்றுவது நல்லது.  ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கன்னியருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
●  வளர்பிறை சஷ்டியன்று முருகனுக்கு விரதம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

குருபெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் : மேஷம்
24 செப் 2018 to 18 அக் 2019


rasi

மேஷம்பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி  அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை தந்திருப்பார். இப்போது  8-ம் இடமான விருச்சிகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வைக்கு விசேஷ சக்தி உண்டு. வாழ்வில் கோடி நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.  அவர்  2019 மார்ச் 13ல் அதிசாரம் பெற்று  9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 2019 மே19 ல் மீண்டும் குரு விருச்சிகத்திற்கு திரும்புகிறார். சனிபகவான்  தனுசு ராசியில்  சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைபலத்தால் நன்மை கிடைக்கும்.  தொழிலில்  முன்னேற்றம் ஏற்படும்.   

இனி பொதுபலனைக் காணலாம்.

குருபகவான் விரய ஸ்தானமாகிய மீனத்தைப் பார்ப்பதால் சுபச்செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் குருபகவானின் 7-ம் இடத்துப் பார்வை மூலம் வருமானமும் பெருகும். இதுவரை உள்ள சேமிப்பு மூலம் வீடு, நிலம் என அசையாச் சொத்து வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் கிடைக்கும் பணத்தில் சிலர் புதுவீடு கட்டவும் வாய்ப்புண்டு. நவீன சொகுசு கார் வாங்க யோகமுண்டாகும்.  குருபகவான் 2019 மார்ச் 13க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். தாய் வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பணி, தொழில் ரீதியாக பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் சூழ்நிலை உருவாகும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு காணப்படும்.  விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு குறைவிருக்காது. விரும்பிய பணி, இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். 2019 மார்ச் 10க்கு பிறகு  வேலையின்றி இருப்பவர்களுக்கு புதிய வேலை  கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். சனியால் திடீர் பொறுப்பு ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. அவரது 10-ம் இடத்துப் பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும்.  2019 மார்ச் 10க்கு பிறகு சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்துவர். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் செய்யலாம். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல இடமுண்டு.  வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது, பாராட்டு கிடைக்கும். எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், நாடக, சினிமா நடிகர்கள் நற்புகழ் பெறுவர்.  

மாணவர்களுக்கு குருவின் பார்வை பலத்தால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. விவசாயத்தில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.  2019 மார்ச் 10க்கு பிறகு அரசு வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. கூடுதலாக சொத்து வாங்க இடமுண்டு.   

பெண்கள் வசீகரமான பேச்சால் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். வீட்டுச் செலவு விஷயத்தில் சற்று சிக்கனத்தை பின்பற்றுவது நல்லது.  ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். கன்னியருக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
●  வளர்பிறை சஷ்டியன்று முருகனுக்கு விரதம்

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :


Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap