ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : தனுசு
16 நவ 2012 to 16 ஜூன் 2014
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
தனுசு
சாதனைத் திறன் மிக்க தனுசு ராசி அன்பர்களே!
உங்கள்ராசிக்கு பதினொன்றில் ராகுவும் ஐந்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்ய ஸ்தானம், ராசியில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே சப்தம, புகழ் ஸ்தானங்களில் பதிகிறது. ராகு மிகச்சிறந்த நற்பலன்களை வழங்குவார். கடந்த காலங்களில் இருந்த நிலை மாறி தாராள பணவரவு இருக்கும். தேவைகள் நிறைவேறும்.பசு, பால் -பாக்யம், தான்ய லாபம் வளமாய் பெறுகிற யோகம் உண்டு. பிறரை மதித்து நடந்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். சமூகத்திலும் மதிப்பு, மரியாதை கிடைக்கும். கேதுவின் அமர்வினால் புத்திரர்களின் படிப்பில் சிறக்க ஊக்கமும் பயிற்சியும் தருவதால் மட்டுமே தரத்தேர்ச்சி சீராகும். பூர்வ சொத்தைப் பராமரிக்கவும், வீட்டை வாடகைக்கு கொடுக்கவும் நம்பகமானவர்களுக்கு இடம் தருவதால் சிரமம் தவிர்க்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகளே வியக்குமளவு வாழ்க்கைத்தரம் மாறும்.தம்பதியர் குடும்பநலன் சிறக்க தேவையான பணிகளை மேற்கொள்வர். மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ் வுகளும் உண்டாகும். நண்பர் கள் தேவையான சமயங்களில் உதவுவர். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற தகுந்த ஆலோசனை சொல்வர். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு அனுகூல பலன் உண்டு. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி அளவும், பொருட்களின் தரமும் உயரும். கூடுதல் ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவீர்கள். புதிய தொழில் கருவிகள் வாங்கலாம். புதிய கிளைகள் துவங்கவும் வாய்ப்புண்டு.
வியாபாரிகள்: நிறுவன நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்களை செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் சேவைத்தரம் உயரும். விற்பனை சிறந்து உபரி வருமானம் கிடைக்கும். புதிய கிளை துவங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பர். குடும்பத்தேவைகளைத் தாராள செலவில் மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள கூடுதல் பயிற்சி மேற்கொள்வர். வீடு, மனை, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தேவையான உதவி கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையாகப் பணி செய்து வேலைகளை விரைந்து முடிப்பர். பாராட்டு, சலுகை, பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். தந்தைவழி உறவினர்களின் பணஉதவி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணி செய்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவரவை பெற்றுத்தரும்.
மாணவர்கள்: மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும். விரும்பிய பரிசுப்பொருள் பெற்றோர் வாங்கித்தருவர். சக மாணவர்களிடம் மதிப்பு உயரும்.
அரசியல்வாதிகள்: எதிர்ப்பு குறையும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி அதிகம் இராது.
விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கூடுதல் பணவரவும் உண்டு.
பரிகாரப் பாடல்:
அன்றால நிழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ
பரிகாரம்:: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் தொழில் சிறந்து வருமானம் கூடும்
ராகு கேது பெயர்ச்சி பலன் : தனுசு
16 நவ 2012 to 16 ஜூன் 2014
தனுசு
சாதனைத் திறன் மிக்க தனுசு ராசி அன்பர்களே!
உங்கள்ராசிக்கு பதினொன்றில் ராகுவும் ஐந்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே பாக்ய ஸ்தானம், ராசியில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே சப்தம, புகழ் ஸ்தானங்களில் பதிகிறது. ராகு மிகச்சிறந்த நற்பலன்களை வழங்குவார். கடந்த காலங்களில் இருந்த நிலை மாறி தாராள பணவரவு இருக்கும். தேவைகள் நிறைவேறும்.பசு, பால் -பாக்யம், தான்ய லாபம் வளமாய் பெறுகிற யோகம் உண்டு. பிறரை மதித்து நடந்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். சமூகத்திலும் மதிப்பு, மரியாதை கிடைக்கும். கேதுவின் அமர்வினால் புத்திரர்களின் படிப்பில் சிறக்க ஊக்கமும் பயிற்சியும் தருவதால் மட்டுமே தரத்தேர்ச்சி சீராகும். பூர்வ சொத்தைப் பராமரிக்கவும், வீட்டை வாடகைக்கு கொடுக்கவும் நம்பகமானவர்களுக்கு இடம் தருவதால் சிரமம் தவிர்க்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகளே வியக்குமளவு வாழ்க்கைத்தரம் மாறும்.தம்பதியர் குடும்பநலன் சிறக்க தேவையான பணிகளை மேற்கொள்வர். மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ் வுகளும் உண்டாகும். நண்பர் கள் தேவையான சமயங்களில் உதவுவர். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற தகுந்த ஆலோசனை சொல்வர். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு அனுகூல பலன் உண்டு. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை தாராள பணச்செலவில் நடத்துவீர்கள்.
தொழிலதிபர்கள்: உற்பத்தி அளவும், பொருட்களின் தரமும் உயரும். கூடுதல் ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவீர்கள். புதிய தொழில் கருவிகள் வாங்கலாம். புதிய கிளைகள் துவங்கவும் வாய்ப்புண்டு.
வியாபாரிகள்: நிறுவன நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்களை செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் சேவைத்தரம் உயரும். விற்பனை சிறந்து உபரி வருமானம் கிடைக்கும். புதிய கிளை துவங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் எளிதாக கிடைக்கும். சக பணியாளர்கள் ஒத்துழைப்பர். குடும்பத்தேவைகளைத் தாராள செலவில் மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள கூடுதல் பயிற்சி மேற்கொள்வர். வீடு, மனை, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். தேவையான உதவி கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையாகப் பணி செய்து வேலைகளை விரைந்து முடிப்பர். பாராட்டு, சலுகை, பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். தந்தைவழி உறவினர்களின் பணஉதவி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணி செய்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவரவை பெற்றுத்தரும்.
மாணவர்கள்: மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து உயர்ந்த தேர்ச்சி பெறுவர். ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும். விரும்பிய பரிசுப்பொருள் பெற்றோர் வாங்கித்தருவர். சக மாணவர்களிடம் மதிப்பு உயரும்.
அரசியல்வாதிகள்: எதிர்ப்பு குறையும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படும். அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி அதிகம் இராது.
விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தியும் கூடுதல் பணவரவும் உண்டு.
பரிகாரப் பாடல்:
அன்றால நிழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ
பரிகாரம்:: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் தொழில் சிறந்து வருமானம் கூடும்