sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

14 வயது சிறுமி மாயம் வரும் 27ல் ஆஜராக போலீசுக்கு உத்தரவு

/

14 வயது சிறுமி மாயம் வரும் 27ல் ஆஜராக போலீசுக்கு உத்தரவு

14 வயது சிறுமி மாயம் வரும் 27ல் ஆஜராக போலீசுக்கு உத்தரவு

14 வயது சிறுமி மாயம் வரும் 27ல் ஆஜராக போலீசுக்கு உத்தரவு


ADDED : ஜூன் 24, 2025 07:51 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நொய்டாவில் மாயமான, 14 வயது சிறுமியை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, போலீஸ் உயரதிகாரிக்கு, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நீதிபதிகள் ரஜ்னீஸ்குமார் குப்தா மற்றும் மன்மீத் பிரிதம் சிங் அரோரா முன், தங்களின், 14 வயது மகள் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோர்ட் பிறப்பித்த உத்தரவின் படி, அரசு தரப்பு சார்பில், நேற்று ஆஜரான போலீஸ் அதிகாரி, 'அந்த சிறுமி மற்றும் அவருடன் மாயமான இரண்டு சிறுமியர், நொய்டா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களை போலீசார் மீட்பர்' என்றார்.

அதையடுத்து, வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, நொய்டா போலீஸ் அதிகாரிக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், 'சிறுமி மாயமான விவகாரம் குறித்து, ஹர்ஷ் விஹார் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் அதிகாரி, விசாரித்து வருகிறார். இதுவரை அவர் எடுத்த நடவடிக்கை குறித்து, எஸ்.பி.,யிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.

'அந்த அறிக்கையை, வரும், 27ம் தேதி கோர்ட்டில் எஸ்.பி., சமர்ப்பிக்க வேண்டும்' என, நொய்டா எஸ்.பி.,க்கு கோர்ட் நேற்று உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us
      Arattai