sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

/

மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : மார் 28, 2025 05:31 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள் மணி மேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்ட மைப்புகள், நகர அளவி லான கூட்டமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.

2024-25ம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு லட்ச ரூபாய், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 3 லட்சம், வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு 5 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு 1 லட்சம், நகரப் பகுதி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சம், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 3 லட்சம், நகர அளவிலான கூட்டமைப்பிற்கு 5 லட்சம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு 1 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ஒரு லட்சமும் வழங்கப்பட உள்ளது.

எனவே சிறப்பாக செயல் படும் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் விண்ணப் பங்களை 30.04.2025-க்குள் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us