ADDED : மார் 28, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த முருகன், 55; விவசாய கூலி. தொழிலாளி இவர் நேற்று முன்தினம் முந்திரி மரத்திற்கு மருந்து அடிப்பதற்காக டிராக்டர் டிப்பரில் சென்றார்.
முந்திரி தோப்புக்குள் சென்று கொண்டிருந்த டிராக் டர் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கி ஏறியதால் டிராக்டரில் அமர்ந்திருந்த முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, பின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.