ADDED : மார் 25, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவளூர்குப்பம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, போலீசார் நேற்று, மேவளூர்குப்பம் பகுதியில் உள்ள பெட்டி கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆன்ஸ், கூல் லிப், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 27 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகந்தகுமார் சாதோய், 34, என்பரை கைது செய்தனர்.