/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுக்கடலில் மின்சாரம் தாக்கி கன்னியாகுமரி மீனவர் பலி
/
நடுக்கடலில் மின்சாரம் தாக்கி கன்னியாகுமரி மீனவர் பலி
நடுக்கடலில் மின்சாரம் தாக்கி கன்னியாகுமரி மீனவர் பலி
நடுக்கடலில் மின்சாரம் தாக்கி கன்னியாகுமரி மீனவர் பலி
ADDED : மார் 25, 2025 07:26 AM

ராமேஸ்வரம் : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் லிபிஸ்டன் 38. இவர் கன்னியாகுமரியில் இருந்து 16 மீனவர்களுடன் மார்ச் 20ல் ஆழ்கடல் மீன்பிடி படகில் மீன்பிடிக்க சென்றார். இப்படகில் இருந்த மீனவர்கள் நேற்று பாம்பன், துாத்துக்குடி இடையே மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது மீனவர் லிபிஸ்டன் படகில் உள்ள மின் சுவிட்சை ஆன் செய்த போது மின்சாரம் பாய்ந்து படகினுள் மயங்கி விழுந்தார். சக மீனவர்கள் பாம்பன் கடற்கரைக்கு படகுடன் திரும்பி மயக்க நிலையில் இருந்த மீனவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.