பிரதமர் மோடியின் சாதனை பயணம் தொடர அனுமன் கோவிலில் அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
டெல்லி; இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றும் பிரதமராக திகழும் பிரதமர் மோடியின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வேண்டி டெல்லி, சாணக்யபுரியில் உள்ள பழமையான அனுமன் கோவிலில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது; பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது; மேலும் உலக அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற அவரது சாதனை நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். ஐந்து தசாப்த கால களங்கமற்ற பொதுவாழ்வு மற்றும் தேசத்தை முதன்மைப்படுத்தும் உறுதியுடன், மோடி அவர்கள் இந்தியாவை புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றுள்ளார்; அத்துடன் கோடிக்கணக்கான சக குடிமக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்திற்கான பாதையையும் அமைத்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் தேசத்திற்குத் தொடர்ந்து சேவையாற்றத் தேவையான சிறந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வலிமையை அவருக்கு அருளுமாறு அஞ்சனையின் மைந்தனான அனுமனிடம் வேண்டிக்கொள்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடன் இந்தியாவையும் உலகையும் அவர் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.