உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று சஷ்டி விரதம்; கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட கவலைகள் தீரும்!

இன்று சஷ்டி விரதம்; கந்தசஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட கவலைகள் தீரும்!

எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.  முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. இன்று முருகனை வழிபட நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்!



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !