ஆனி பவுர்ணமி; திருவண்ணாமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு
திருவண்ணாமலை ; ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். இதில், தினமும், ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட மலையை வலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமி திதி இன்று (29ம் தேதி) 5.57 மணிக்கு தொடங்கி மறு நாள் 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.16 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.