உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று யோகினி ஏகாதசி, கார்த்திகை விரதம்; பெருமாள், முருகனை வழிபட நினைத்த காரியம் கைகூடும்!

இன்று யோகினி ஏகாதசி, கார்த்திகை விரதம்; பெருமாள், முருகனை வழிபட நினைத்த காரியம் கைகூடும்!

ஆனி தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.  ஆனி மாத தேய்பிறையில் தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது.  88,000 அந்தணர்களுக்கு உணவளிப்பதால் அடையும் பலனை இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். இந்த யோகினி ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்து, மிகுந்த தெய்வ பக்தியை கொடுக்கிறது.


முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் சிறப்பு மிக்கது. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் கந்த பெருமான். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அரோகரா சொல்லி  ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். இன்று முருகன், பெருமாளை வழிபட்டு கவலைகள் நீங்கி செல்வ வளம் பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !