காரைக்கால் மீனவர்கள் வலையில் சிக்கிய குருபகவான் சிலை
ADDED :1 days ago
காரைக்கால்: காரைக்காலில் மீனவர்கள் வலையில் 500 ஆண்டுகள் பழமையான குருபகவான் கருங்கல் சிலை கிடைந்தது.
புதுச்சேரி, காரைக்கால்மேடு சுனாமி நகரை சேர்ந்தவர் நிர்மல் விஷ்ணு, 26. இவரது விசைப்படகில் அதேப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 5ம் தேதி மீன் பிடித்துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், நேற்று முன்தினம் மகாபலிபுரம் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென வலையில் அதிகம் எடைக்கொண்ட பொருள் சிக்கியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் வலையை மேல்பகுதிக்கு இழுந்து வந்து போது, அதில், 500 ஆண்டுகள் பழமையான குருபகவான் கருங்கல் சிலை இருந்தது. பின்னர் சிலையை துணை ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் ஒப்படைந்தனர். இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன், போலீசாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.