உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாயன புண்ணியகாலம்: நிளா நதியில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடல்

தட்சிணாயன புண்ணியகாலம்: நிளா நதியில் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடல்

பாலக்காடு: ​ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், தட்சிணாயன புண்ணியகாலத்தை முன்னிட்டு நிளா நதியில் புனித நீராடினார்.


கேரள மாநிலம் பாலக்காட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ​ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், புண்ணியகாலத்தின் ஒரு பகுதியாக, நிளா நதிக்கரையில் விசேஷ பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் அர்ச்சனைகளைச் செய்தார். தொடர்ந்து நதிக்கரையில் மங்களகரமான ஆராத்தியுடன் வழிபாடுகள் நிறைவுபெற்றன. ​இயற்கை பாதுகாப்பு வலியுறுத்தல் இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நதிக்கரையில் அரசு மற்றும் வேப்ப மரக் கன்றுகளை சுவாமிகள் நட்டு வைத்தார். இயற்கையைப் பாதுகாப்பதும், நதிகளின் புனிதத்தன்மையையும் தூய்மையையும் காப்பதும் ஒவ்வொருவரின் கடமை என்பதை அவர் தனது அருளுரையில் நினைவூட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !