முத்தாலம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :4 hours ago
விழுப்புரம்: விழுப்புரம், வழுத ரெட்டி முத்தாலம்மன் அபிராமேஸ்வரர் கோவிலில் 8ம் ஆண்டு சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று காலை 8:00 மணிக்கு கரகம் ஜோடித்து ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், அம்மனுக்கு தீபாராதனையும், 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.