இஸ்கான் ரத ஊர்வலம்
ADDED :7 hours ago
சோழவந்தான்: கிருஷ்ண பக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இஸ்கான் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுதும் ரதம் வலம் வருகிறது. ‘காங்க்ரேஜ்’ மாடுகள் பூட்டி, நித்தியானந்தர், சைதன்யர், பிரபு பாதர் உருவ பொம்மைகளுடன் தமிழ்நாடு முழுதும் வலம் வரும் ரதம், நேற்று சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம் பகுதிகளில் வந்தது.
கிருஷ்ண பக்தி, பகவத் கீதையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. ரதத்தில் பூட்டிய மாடுகள் வட இந்தியாவில் மட்டுமே இருப்பதால் அதனைப் பார்த்த பொதுமக்கள் பரவசமடைந்தனர். அதற்கு உணவு வழங்கி ஆசீர்வாதம் பெற்றனர்.
தென்கரையில் கிருஷ்ணன் கோயில் அர்ச்சகர் பாலாஜி குழுவினருடன் பஜனை வழிபாடு நடந்தது. வெங்கடரமணன், தண்டபாணி, கருப்பத்தேவன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.