உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு; பக்தர்கள் குவிந்தனர்

அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு; பக்தர்கள் குவிந்தனர்

மதுரை அழகர் கோயில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத பெளர்ணமி அன்று மட்டுமே நடை திறக்கப்படும் . அதன்படி நேற்று ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு நடை திறப்பு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி அழகர் மலையைக் காக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவருக்கு உருவம் கிடையாது, சந்தனம் பூசப்பட்ட கோபுரமாக வணங்கப்படுகிறார். இக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி அன்று காலையில் அழகர் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு, பரம்பரை பூசாரிகளால் கதவுகளுக்கு குடம் குடமாக சந்தனம் பூசி, நீண்ட பூமாலைகள் அணிவித்து, நீண்ட அரிவாள்கள் சாத்தி வழிபாடுகள் நடைபெற்றது. ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் 18 ம் படி கருப்பணசாமி சன்னதி கதவுகள் வருடத்திற்கு ஒருமுறை ஆடி பெளர்ணமி அன்று மட்டுமே திறக்கப்படுவது குறிபடித்தக்கது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !