உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் திருவிழா

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் 63 நாயன்மார்கள் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பெரியகுளம் ராஜேந்திர சோழீஸ்வரர் சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பில் 63 நாயன்மார்கள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் சிவகாமசுந்தரி நடராஜப் பெருமாள், நால்வர் திருமேனிக்கு அபிஷேகம், திருவாசகம் முற்றோதல், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று பாலசுப்பிரமணியர் கோயிலில் உள்ள மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், கண்ணப்பர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் ஆராதனை நடந்தது. இதனை திருஞானசம்பந்தர் ஆதினம் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், திருப்பணியாளர் எஜமான்பாண்டி முனீஸ்வரர் நடத்தினர். ரிஷப வாகனத்தில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் கோயில் வளாகத்தில் உலா வந்தார். ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். ஆனந்த நடராஜர், சிவகாம சுந்தரி மற்றும் நால்வர் வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !