சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை
ADDED :1 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருடம் தோறும் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்தாண்டு தபால் ஆபீஸ் பின்புறம் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாள் ஆடி வழிபாட்டுக்கு பிறகு ஆக. 14ஆம் தேதி பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டு செல்கின்றனர். அங்கு விழாக் குழுவினர் சார்பில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்படும். விழா, பயணத்துக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி வடக்கு வளவு சமயபுரத்தாள் பாதயாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.