பஜனோத்ஸவம் நிகழ்ச்சிக்கு வந்த பாண்டுரங்கன் விக்ரகம்
ADDED :1 days ago
கோவை: ஸ்ரீநாமசங்கீர்த்தனா டிரஸ்ட் சார்பில், 13 முதல் 16ம் தேதி வரை பஜனோத்ஸவம் நிகழ்ச்சி ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் நடக்கிறது.
இதற்காக சுவாமி பாண்டுரங்கன், ருக்மணி விக்ரகங்கள், சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியிலுள்ள பாண்டுரங்கன் ருக்மணி தியான மந்திரில் இருந்து, ராம்நகர் கோதண்டராமர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.
கோதண்டராமர் கோயிலில் இருந்து பக்தர்கள் சூழ மேளதாளங்கள் முழங்க நேற்று மாலை 5:30 மணிக்கு, சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு பாண்டுரங்கன், ருக்மணி விக்ரகங்களுக்கு அலங்கார பூஜைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.