உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் கருட பஞ்சமி விழா கோலாகலம்; கருட வாகனத்தில் சுவாமி உலா

திருப்பதியில் கருட பஞ்சமி விழா கோலாகலம்; கருட வாகனத்தில் சுவாமி உலா

திருப்பதி; திருப்பதியில் கருட பஞ்சமி தினமான நேற்று திங்கள்கிழமை திருமலையின் மாட வீதிகளில் ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது விருப்பத்திற்குரிய வாகனமான கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட வாகன சேவை மாலை 7:00 மணிக்குத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


இறைவனின் வாகனங்கள் மற்றும் பரிவாரங்களில் கருடன் முதன்மையான இடத்தைப் பெறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சுக்ல பட்சத்தின் (வளர்பிறை) ஐந்தாம் நாளில் கருட பஞ்சமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வேண்டிப் புதுமணத் தம்பதிகள் கருட பஞ்சமி பூஜையை மேற்கொள்கின்றனர்; அதேவேளையில், தங்கள் குழந்தைகள் கருடனைப் போல வலிமையுடனும் வீரத்துடனும் திகழ வேண்டும் என்று பிரார்த்தித்து பெண்கள் இப்பூஜையைச் செய்கின்றனர்.நேற்று நடைபெற்ற சிறப்புமிக்க இந்த விழாவில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கய்ய சௌதரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !