பான் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :4 hours ago
ஹலசூரு: ஹலசூரு பான் பெருமாள் கோவிலில் நாளை, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.
பெங்களூரு ஹலசூரு பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற பான் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
காலை 7:00 மணி முதல் சர்வதர்ஷன் அர்ச்சனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று கிருஷ்ணரின் தரிசனம் பெற்று செல்லும்படி, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.