ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : கடகம்
16 நவ 2012 to 16 ஜூன் 2014
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
கடகம்
பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகுவும் பத்தாம் இடத்தில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சத்ரு, பணவரவு ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே சுபவிரயம், ஆயுள் ஸ்தானத்தில் பதிகிறது. இரண்டு கிரகங்களுமே எதிர்மறையான பலன்களைத் தர உள்ளனர். இருப்பினும் ராகு-கேதுவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் செயல்களில் தகுந்த திட்டமிடல் மட்டுமே வெற்றியை பெற்றுத்தர உதவும். உங்களுக்கு எதிராக நடந்த சிலர், தங்கள் காரியம் ஆக வேண்டுமென்பதற்காக, கவர்ச்சியாகப் பேசி உங்களின் உழைப்பைத் திருட விரும்புவர். அவர்களிடம் எச்சரிக்கையுடனும், விலகியிருப்பதும் நல்லது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பயணத்தில் மிதவேகம் வேண்டும். புத்திரர்கள் எதிர்பார்ப்பு மனதுடன் உங்களை அணுகுவர். அவர்கள் விரும்பியதை வாங்கித்தருவீர்கள். பணத்தேவையை சரிக்கட்ட கடன் பெறுவீர்கள். உஷ்ணம், அஜீரணம், வயிற்றுவலி போன்ற உடல் உபாதை வரலாம். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு வரலாம். பணவரவு குறையும் என்பதால், அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள்.நண்பர்களின் ஆலோசனை, கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் ஏற்பது போல் நடியுங்கள். மூத்த சகோதர, சகோதரியின் அன்பு கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும். புதிய செயல்பாடுகளை தள்ளி வைப்பது நல்லது. உற்பத்தி, நிர்வாகச் செலவு அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் குறையும். கூட்டுத் தொழில் துவங்குவதில் நிதானம் வேண்டும்.
வியாபாரிகள்: விற்பனை ஓரளவுக்கு இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சரக்கு இருப்பு வைக்கும் இடங்களில் பாதுகாப்பு நடைமுறையை
பின்பற்ற வேண்டும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு சுமூக நட்பு கொள்வது நல்லது. இயந்திர பணியில் உள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புதிய சலுகை கிடைக்க வாய்ப்பு குறைவு. குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்காக சிறு அளவில் கடன் பெற வேண்டியிருக்கும். சிலருக்கு பணியிடம், வீடு மாற்றம் இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். சலுகைகள் கிடைக்க பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமார் லாபம் காண்பர்.
மாணவர்கள்: பாடங்களை புரிந்துகொள்வதில் தயக்கமும் சிறு குழப்பமும் இருக்கும். கூடுதல் பயிற்சி, மனம் ஒன்றுபட கடவுள் வழிபாடு தியானம் பின்பற்றுவதால் ஞாபகத்திறன் வளர்ந்து நல்ல மதிப்பெண் பெற உதவும். ஆடம்பரச்செலவு செய்வதில் உள்ள ஆர்வத்தைக் குறைப்பது நல்லது. சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். பெற்றோர் உங்களுக்கு தேவையான உதவி வழங்குவர்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயர் சரியும். ஆதரவாளர்கள், பணம் எதிர்பார்த்து அணுகுவதால் விரக்தி உண்டாகும். அதிகாரிகளிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் எதிர்பார்ப்பது நிறைவேறும். எதிரிகளிடம் விலகுவதால் அனுகூலம் கிடைக்கும்.
விவசாயிகள்: அதிக பணவரவு தருகிற பயிர்வகைகளை விளைவிக்க முயற்சி மேற்கொள்வர். மகசூல் ஓரளவு கிடைக்கும். விவசாயக்கடன் பெறுவதில் குறுக்கீடு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு வரும். சொத்து தொடர்பான முக்கிய ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம்.
பரிகாரப் பாடல்:
காணற்கு அரிதான வாயு மைந்தா
கானந்தொரு தான்திரி நீதியுளோய்
வானத்தவர் பூமியுளோர் வாழ்த்திடுமோர்
மோனத்தவ மாருதியைப் போற்றுதுமே.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன் அதிகரிக்கும்.
ராகு கேது பெயர்ச்சி பலன் : கடகம்
16 நவ 2012 to 16 ஜூன் 2014
கடகம்
பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றும் கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகுவும் பத்தாம் இடத்தில் கேதுவும் இடம் பெற்றுள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே சத்ரு, பணவரவு ஸ்தானங்களில் பதிகிறது. கேதுவின் 3, 11ம் பார்வை முறையே சுபவிரயம், ஆயுள் ஸ்தானத்தில் பதிகிறது. இரண்டு கிரகங்களுமே எதிர்மறையான பலன்களைத் தர உள்ளனர். இருப்பினும் ராகு-கேதுவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் செயல்களில் தகுந்த திட்டமிடல் மட்டுமே வெற்றியை பெற்றுத்தர உதவும். உங்களுக்கு எதிராக நடந்த சிலர், தங்கள் காரியம் ஆக வேண்டுமென்பதற்காக, கவர்ச்சியாகப் பேசி உங்களின் உழைப்பைத் திருட விரும்புவர். அவர்களிடம் எச்சரிக்கையுடனும், விலகியிருப்பதும் நல்லது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பயணத்தில் மிதவேகம் வேண்டும். புத்திரர்கள் எதிர்பார்ப்பு மனதுடன் உங்களை அணுகுவர். அவர்கள் விரும்பியதை வாங்கித்தருவீர்கள். பணத்தேவையை சரிக்கட்ட கடன் பெறுவீர்கள். உஷ்ணம், அஜீரணம், வயிற்றுவலி போன்ற உடல் உபாதை வரலாம். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு வரலாம். பணவரவு குறையும் என்பதால், அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யுங்கள்.நண்பர்களின் ஆலோசனை, கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றாலும் ஏற்பது போல் நடியுங்கள். மூத்த சகோதர, சகோதரியின் அன்பு கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: இருப்பதைப் பாதுகாத்துக் கொண்டாலே போதும். புதிய செயல்பாடுகளை தள்ளி வைப்பது நல்லது. உற்பத்தி, நிர்வாகச் செலவு அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் குறையும். கூட்டுத் தொழில் துவங்குவதில் நிதானம் வேண்டும்.
வியாபாரிகள்: விற்பனை ஓரளவுக்கு இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சரக்கு இருப்பு வைக்கும் இடங்களில் பாதுகாப்பு நடைமுறையை
பின்பற்ற வேண்டும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு சுமூக நட்பு கொள்வது நல்லது. இயந்திர பணியில் உள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புதிய சலுகை கிடைக்க வாய்ப்பு குறைவு. குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்காக சிறு அளவில் கடன் பெற வேண்டியிருக்கும். சிலருக்கு பணியிடம், வீடு மாற்றம் இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். சலுகைகள் கிடைக்க பகீரதப்பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். தங்க நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமார் லாபம் காண்பர்.
மாணவர்கள்: பாடங்களை புரிந்துகொள்வதில் தயக்கமும் சிறு குழப்பமும் இருக்கும். கூடுதல் பயிற்சி, மனம் ஒன்றுபட கடவுள் வழிபாடு தியானம் பின்பற்றுவதால் ஞாபகத்திறன் வளர்ந்து நல்ல மதிப்பெண் பெற உதவும். ஆடம்பரச்செலவு செய்வதில் உள்ள ஆர்வத்தைக் குறைப்பது நல்லது. சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். பெற்றோர் உங்களுக்கு தேவையான உதவி வழங்குவர்.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயர் சரியும். ஆதரவாளர்கள், பணம் எதிர்பார்த்து அணுகுவதால் விரக்தி உண்டாகும். அதிகாரிகளிடம் சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் எதிர்பார்ப்பது நிறைவேறும். எதிரிகளிடம் விலகுவதால் அனுகூலம் கிடைக்கும்.
விவசாயிகள்: அதிக பணவரவு தருகிற பயிர்வகைகளை விளைவிக்க முயற்சி மேற்கொள்வர். மகசூல் ஓரளவு கிடைக்கும். விவசாயக்கடன் பெறுவதில் குறுக்கீடு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் சுமாரான பணவரவு வரும். சொத்து தொடர்பான முக்கிய ஆவணம் பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம்.
பரிகாரப் பாடல்:
காணற்கு அரிதான வாயு மைந்தா
கானந்தொரு தான்திரி நீதியுளோய்
வானத்தவர் பூமியுளோர் வாழ்த்திடுமோர்
மோனத்தவ மாருதியைப் போற்றுதுமே.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன் அதிகரிக்கும்.