பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவ ஸ்நான பூர்ணிமா; பக்தர்கள் குவிந்தனர்
ஒடிசா ;பூரி ஜெகன்னாதர் வழிபாட்டு மரபில் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றான தேவ ஸ்நான பூர்ணிமாவைக் காண ஒடிசாவின் பூரி நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
பூரியில் உள்ள ஜெகன்னாதர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்நான மண்டபம் என்பது ஒரு புனிதமானதாகும். இங்குதான் கண்கவர் ஸ்நான பூர்ணிமா அல்லது தேவ ஸ்நான பூர்ணிமா சடங்குகள் நடைபெறுகின்றன. ஆண்டு முழுவதும் கருவறையில் வீற்றிருக்கும் அந்தத் தெய்வீக மூர்த்திகள், பொது மக்கள் தரிசனம் செய்வதற்காக வெளியே வரும் ஒரே தருணம் இதுவாகும். இந்தத் தெய்வீக ஊர்வலம், ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரைக்கு முந்தைய மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்று நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான ஸ்நான பூர்ணிமா சடங்குகளுக்காக, பகவான் ஜெகன்னாதர், பகவான் பலபத்ரர், தேவி சுபத்ரா மற்றும் சக்ரராஜ் சுதர்சனம் ஆகியோர் ஸ்நான மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்நான மண்டபத்தில், பகவான் ஜெகன்னாதர், பகவான் பலபத்ரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோருக்கு 108 குடங்கள் கொண்ட புனித நீரால் நீராட்டு விழா நடைபெற்றது. ஜெகன்னாதர் வழிபாட்டு மரபில் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றான தேவ ஸ்நான பூர்ணிமாவைக் காண ஒடிசாவின் பூரி நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இறைவனின் ஆசியையும் ஆன்மீக நிறைவையும் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.