ராமஅழகர் கோயிலில் சந்தனக்குட விழா
ADDED :3 hours ago
சின்னாளபட்டி: ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சின்னாளபட்டி ராமஅழகர் சுவாமி கோயிலில் சந்தனக்குட விழா நடந்தது. இதையொட்டி அக்கசாலை விநாயகர் கோயிலில் இருந்து பிருந்தாவன தோப்பிற்கு சந்தனம் நிரப்பிய கலய ஊர்வலம் நடந்தது.
கோயிலில் விழாக்குழுவினரின் காப்பு அகற்றப்பட்டு அனைத்து கலயங்களில் இருந்த சந்தனம் தனி பாத்திரத்தில் சேகரிக்கப் பட்டது. அவற்றை கரைத்து 18 படி கருப்பணசாமி கோயில் கதவு, அரிவாள், வேல் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூசப்பட்டது.
சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
விழாவில் ராமஅழகர் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
திருவிளக்கு பூஜை, ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.