திருவாசகம் கூட்டுப் பாராயணம்; உலக சாதனையாளருக்கு பாராட்டு
திருப்பூர்: ஸ்ரீமாணிக்கவாசகர் குருபூஜை விழாவில், திருவாசகம் கூட்டு பாராயணம் செய்த பக்தர்களுக்கு, ‘உலக சாதனை -– 2026’ சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜை விழாக்குழு, என்ட்விண்ட் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாமாட்சி அம்மன் மகளிர் பேரவை சார்பில், ‘திருவாசகத் தேன் 2026 - சிவபுராண கூட்டுப் பாராயணம்,’ கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது.
உலக சாதனை நிகழ்வுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு ஓதுவாமூர்த்தி சிவ கபிலன் தலைமை வகித்தார். சிவனடியார்கள் மற்றும் திருமுறை ஆர்வலர்களின் பங்கேற்புடன், உலக சாதனையைப் பதிவு செய்தனர்.
சைவ சமய நெறிகளையும், திருமுறை மரபின் பெருமையையும் உலகளவில் எடுத்துரைத்த இந்நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சாத னையை நிகழ்த்திய சிவனடியார்கள் மற்றும் திருமுறை ஆர்வலர்களைக் கவுரவிக்கும் பாராட்டு விழா மற்றும் உலக சாதனைச் சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.
கோவை ஏ.ஐ.இ.எப். நிறுவனர் டாக்டர் கதிர்வேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற சிவனடியார்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சார்யார் ஆரரூ சுப்ரமண்ய சிவம், இறைவணக்கம் பாடி பாராட்டு விழாவை துவக்கி வைத்தார்.
உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்த ஸ்ரீகாமாட்சி அம்மன் மகளிர் பேரவை மன்ற கவுரவ தலைவர் பத்மா சிவலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலாதேவி செல்வராஜ், அமுதா ராமசாமி, மீனா முரளி, ஸ்ரீலேகா ரவி கணேசன், சுதா விஸ்வநா தன், மஞ்சுளா சீனிவாசன் ஆகியோர், உலக சாதனை பங்கேற்பாளர்களை பாராட்டி சிறப்பித்தனர்.